This is intended to be a collection the karnatik music song lyrics in a few languages that I have written and set to music over the last year.
Dr.RKE, Trichy
drrke12@gmail.com
Dr.RKE, Trichy
drrke12@gmail.com
ராகம்: கல்யாணி தாளம்: ஆதி
(ப) எங்கே சென்று நான் முறையிட
சங்கர சுதன்1 காதில் விழும்படி
(அ.ப) செந்திற் பதியில் அலை ஆர்ப்பரிக்கும்- பரங்
குன்றில் குடவறை2 எதிரொலிக்கும்
(ச) பழமுதிர்சோலையில் வண்டுகள்3 கானம்
கழுகுமலையில் காவடிச்சிந்து4
தாளம்
தணிகையிலோ வெண்களிறு5 முழங்கும்
தமியன்6 கதறல் அமிழ்ந்திடும் எங்கும்
குறிப்புகள்:
- சங்கர ஸுதன்: சங்கரன் மகன், முருகன்
- குடவறை: குகை (கழகத்
தமிழ்க் கையகராதியின்படி) வரை என்றால் மலை. குடைவரை என்பது மலையைக் குடைந்து
செய்யப்படுவது. தென் திருப்பரங்குன்றத்தில் முன்பு இருந்தது இயற்கையான குகைக்
கோவில். அது மூடிப்போனதால் பிற்காலத்தில் குன்றின் வடபகுதியில் குடைவரைக்
கோவில் செய்யப்பட்டது.
- 2013ல் பழமுதிர்சோலை செல்லும் வழியில் வண்டுகள் கானம் கேட்டு மகிழ்ந்தது இன்றும் நினைவில் உள்ளது.
- எட்டயபுர மன்னர் குழாம் கழுகுமலைக்குக்
காவடி எடுத்துச் செல்லும் வழியில் உற்சாகப் படுத்துவதற்காக அண்ணாமலை ரெட்டியாரால் புனையப்பட்டதே காவடிச் சிந்து.
- திருத்தணியில் தெய்வானை மணாளனுக்கு, இந்திரன் தன் ஐராவதத்தைத் திருமணச் சீராக வழங்கியதாகவும், முருகப்பெருமான் அதைத் திரும்பவும் இந்திரனிடமே அனுப்பியதாகவும் புராணம். ஆகையால் இத்தலத்தில் முருகன் சந்நிதியின் முன் மயில் இல்லை. திரும்பிப் போகும் யானையே (வெண் களிறு) உள்ளது.
- தமியன்: எளியவன், வறியவன்