Saturday, 23 April 2016

A song on Lord Muruga at Thirumalai near Tenkasi

47: ராகம்: சுத்த தன்யாசி  13/04/16

வா வா மயில் வாஹனா- அழகா
ஆறாறு கரம் வீசி வா- பரமா        (வா வா)        

காமாரி மகன் அல்லவா – முருகா
காமாதிப் பகை தீர்க்க வா - விமலா  (வா வா)

மாமானும் மாலல்லவா- என்போல்
சாமானியர் காக்க வா- பண்பொழி
நாதா திருமலை வேலா யுதவி    
-சாகா, வரமளிக்க வாவா  வாவா  (வா வா)

குறிப்பு
ஆறாறு = 6 + 6= 12
பரமா = கடவுளே
காமாரி = காமனை அழித்த சிவன்
காமாதிப் பகை = காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம், மாச்சரியம் என்ற அறுவகை உட்பகை
விமலா = தூயவனே (மலங்கள் அற்றவனே)
மாமான் = அம்மான், தாயின் தமையன்
மால் = விஷ்ணு, காக்கும் கடவுள்
பண்பொழி = தென்காசி அருகில் உள்ள திருமலையின் அடிவாரத்தில் உள்ள சிற்றூர்
திருமலை வேலாயுத = திருமலைக் குமாரசாமி
விசாகா  = முருகா

திருமலை வேலா உதவி - சாகா வரம் அளிக்க  வா என்று மற்றொரு பொருளும் கொள்ளலாம் 

English transliteration
vA vA mayil vAhanA - azhagA
ARARu karam vIsi vA- paramA  (vA vA)

kAmAri magan allavA - murugA
kAmAthip pagai thIrkka vA- vimalA (vA vA)

mAmAnum mAlallavA- enpOl
sAmAniyar kAkka vA- paNpozhi 
nAthA thirumalai vElAyutha vi
sAkA varamaLikka vAvA vAvA   (vA vA)

English meaning
Come, come Oh, the handsome peacock rider, come swinging your 12 arms, oh Lord

Oh, murugA, aren't you the son of (shivA) the one who burnt manmad'a (kAma): come to burn up the six internal enemies within me (viz: kAma - passion, krOdha- anger, lObham- covetousness, mOham- attachment, mad'am: conceit, mAtsaryam: jealousy)

Aren't you the nephew of the thirumal (who is a protector)- please protect commoners like me. The Lord of Panpozhi (the village on the foothills of thirumalai), the vElAutha of thirumalai, vis'Aka (a name for muruga), come, come to grant me the boon. 

(parsed differently, the last 2 lines can be taken to mean: thirumalai vElA uthavi (help) sAgA varamaLikka vA (grant me the boon of eternity, deathlessness)  


Wednesday, 6 April 2016

A song in Bilahari on mental worship citing Thirumayilai Vaayilaar and Thiruninravoor Poosalar

Song 45: 21/03/16: Written after seeing (quite by chance) a live telecast of Mylapore Ther festival
ராகம்: பிலஹரி

ஆலயம் தொழுவது சாலவும் நன்று1 - மன
ஆலயம் தொழுவது2 அதனினும் நன்று                (ஆலயம் தொழுவது)

மயிலாலும் புன்னைசூழ்3 கயிலையாம்4 பதியில்
தனியாக அமர்ந்த வாயிலார்5 போல் நமக்குள் (ஆலயம் தொழுவது)

6மறவாமை என்பதே அரனுறைக் கோவிலாய்      
உறவால் ஏற்றிடும் சுடரொளி விளக்காய்       
குறைவிலா ஆனந்தமே திருமஞ்சன நீராய்     
மறைமுதலோனுக்கு அன்பே அமுதமாய்          (ஆலயம் தொழுவது)

காடவர் கோன்7கலைக் கோவிலைத்8 துறந்து
நாடவர் கண்டிராத்9 திருநின்றவூர் பூசலான்
உள்மன உறைவிடம் விரும்பிய10 அண்ணலின்11  
ஒள்ளொளி12 வெள்ளத்தி லிரண்டறக் கலந்திட    (ஆலயம் தொழுவது)

குறிப்பு
1.        பாடலின் முதல் வரி ஔவையாரின் 'கொன்றை வேந்தன்' செய்யுளின் இரண்டாவது வரி.
2.        மனத்தையே கோயிலாகக் கொண்டு வழிபாடு செய்தல்
3.        மயில்கள் ஆடும், புன்னை மரங்கள் சூழ்ந்த திருமயிலை
4.        கயிலையே மயிலை, மயிலையே கயிலை என்று சொல்வது வழக்கம்
5.        வாயிலார் நாயனார் திருமயிலையில் அவதரித்தவர். மானசீக வழிபாட்டிற்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர். திருமயிலை கபாலீஸ்வரர் கோவிலில் இவருக்கு ஒரு தனி சன்னதி உள்ளது
6.        சேக்கிழாரின் பெரிய புராணத்தில், வாயிலார் கதையைக் கூறும் செய்யுள்:  
                                                                                                        (Translated by Sri T.N. Ramchandran)
Rearing within a mental shrine of un-forgetfulness,
He lit the lustrous lamp of godly consciousness;
Immortal bliss constituted his ablutions to the Lord;
He offered unto the Lord of Dharma, the nectarean food
Of his love; thus, even thus, he did his pooja.  



7.        காடவர்கோன் என்பது பல்லவ அரசனான  இராஜசிம்மனின் பெயர் (இரண்டாம் நரசிம்மவர்மன் ஆட்சிக் காலம் கி.பி. 700-728)
8.        அவன் எழுப்பிய கைலாசநாதர் கோவில் காஞ்சிபுரக் கோவில்களில், பல்லவர்கள்  சிற்பக்கலையில் எட்டிய மேன்மையைப் பறைசாற்றுகிறது.
9.        கைலாசநாதர் கோவில் கட்டி முடித்து அதைத் திறக்கும் முதல் நாளிரவு அரசன் கனவில் வந்த ஈசன், தான் திருநின்றவூர் பூசலார் கட்டிய கோவிலுக்குச் செல்வதால்  காஞ்சிக்கு  வர இயலாது என்று கூறினாராம். அரசனும் வியப்பு மேலிட திருநின்றவூர் சென்று விசாரித்தால் அங்குள்ள மக்களுக்கு, பூசலார் கட்டும் (மனக்) கோவிலைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. அதனால் "நாடவர் கண்டிரா"
10.      பெரும்பொருள் செலவிட்டு மிக நேர்த்தியாகக் கட்டப்பட்ட அரசனின் கோவிலை விட அன்பன் பூசலாரின்  மனக்கோவிலில் குடியேறுவதையே பரமேஶ்வரன் விரும்பினான்
11.      பரமசிவன்
12.  மிகுந்த ஒளி; சோதி வடிவானப் பரசிவ வெள்ளம்  

A song in Saramathi on Rama Naama

Song 46: 31/03/16 - 02/04/16
ராகம்: ஸாரமதி

ராம நாமத்தைப்போல் வேறொரு
     உய்வழி உண்டோ- பாமரர் நமக்கு

முக்கண்ணனார் தம் தேவியை1 - மும்முறை
     ஓதப் பணித்த மிகலகு உபாயம்

வேத ஶாஸ்த்ரமோதி நேம நிஷ்டை செய்துத்
தேடவொண்ணாப் பேரின்ப வீடு2 தரும்-பேர்
மாற்றிச் சொன்ன வேடனும் கவியானனே3
கூற்றில்4 வீழாதெம்மைக் காக்கும் மந்த்ரமே

குறிப்பு

1.விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் கடைசியில் பார்வதி, சிவபெருமானிடம் "கேனோபாயேன லகுனா விஷ்ணோர் நாம ஸஹஸ்ரகம், பட்யதே பண்டிதைர் நித்யம் ச்ரோதுமிச்சாம்யஹம் ப்ரபோ " என்று கேட்க, அதற்கு சிவபெருமானும் " ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே, ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே" என்று சொன்னதை அனுபல்லவியில் சொல்லப்படுகிறது'ராம மந்த்ரவ ஜபிஸோ ஏ மனுஜா' என்ற புரந்தரதாஸரின் கிருதியில் "சோமஶேகர தன்ன பாமெகொரெதிக மந்த்ர" என்று கூறுகிறார் 
 
2. பேரின்ப வீடு = மோட்சம். மேற்சொன்ன அதே தாஸர் கிருதியில்  "முகுதி மார்க்ககே இதே மூல மந்த்ர" என்று குறிப்பிடுவதைக் காண்க.

3. ரத்னாகரன் என்ற வேடன் (வழிப்பறிக் கொள்ளையனாக மாறிய பின் நாரதரின் சொல்லுக்கு இணங்கி)ராம ராம என்று சொல்லத்தெரியாமல் மரா மரா என்று ஜபம் செய்து, வால்மீகி என்ற மகாகவியானது சரணத்தில் சொல்லப்படுகிறது


4. கூற்றில்= யமனிடம் 

Sunday, 20 March 2016

A prayer to Alamelumanga thAyAr

Written After a visit to Thiruchanur aka AlamElumangApuram and Tirupati  Feb 2016

A prayer to Alamelumanga to represent to Srivari: not for wealth or fame or even the pleasures of the heavens, but to get total concentration on Him for one or  two minutes during any of the celebrated sevas at Tirumala. So, He would occupy our mind entirely, with nary any other thought. 

ராகம்: மணிரங்கு        தாளம்: மிஸ்ர சாபு 

அம்மா, அலர் மேலுறை மங்காய்!
எம்மானிடம் விண்ணப்பம் தாராய்.                              (அம்மா)

பொன்னும் புகழும் பாரில் விரும்பி  
நான் அவனிடம் வேண்டவில்லை;
வான் உலக இன்பமும் நாடவில்லை;
தான் நிகரிலான் மலையப்பனிடம்,                                 (அம்மா)

வைகறைப் பொழுது துயிலெழும் வேளையில்1
பைந்தளிர் மலர்மாலை சூட்டும் பொழுதில்2
ஆயிரம் நாமத்தால் அர்ச்சிக்கும் நேரத்தில்3  
வேதியர் ஓதிடும் திருமண விழாவில்4
ஆயிரங் கலசப் புனித நீராட்டலில்5    
தேவியர் இணைந்து ஊஞ்சலாடுகையில்6
ஆயிர தீபவொளி மின்னிடும் சமயத்தில்7
ஏதேனு மொன்றினில் இரண்டொரு நிமிடம்
வேறேது எண்ணமும் இன்றியவன் திரு
முகமென் மனதில் நிலைக்க வேண்டுமென            (அம்மா)

Note: The numbers in superscripts indicate the various sevas at the Tirumala temple
  1. Suprabhatha seva
  2. ThOmAla seva
  3. SahasranAma archana
  4. KalyANOtsava
  5. SahasrakalasAbhishekam
  6. Unjal seva
  7. Sahasradeepa alankAra seva

English transliteration
rAgam: manirangu                   thALam: misrachApu
ammA, alarmEluRai mangAy
emmAnidam viNNappam thArAy                 (ammA)

ponnum pugazum pAril virumbi
nAn avanidam vENdavillai
vAnulaga inbamum nAdavillai
thAn nigarilan malaiyappanidam                   (ammA)

vaigaRaip pozuthu thuyilezum vELaiyil
painthaLir malarmAlai sUttum pozuthil
Ayiram nAmaththAl archchikkum nEraththil
vEthiyar Othidum thirumaNa vizAvil
Ayiram kalasap punitha nIrAttalil
d’Eviyar iNainthu UnjalAdugaiyil
Ayira d’IpavoLi minnidum samayaththil
EthEnum onRinil iraNdoru nimidam
vEREthu eNNamum inRi avan thiru

mukamen manathil nilaikka vEndumena       (ammA)


The Universal Feminine Power (Shakthi)

உலகப் பெண்கள் தினத்தன்று (8.3.16) அண்ட கோடி சராசரங்களையும் இயக்கும் தேவியைப் பற்றி எழுதிய பாடல்

ராகம்: நளினகாந்தி

வளி வெளி எங்கும் நிறைந்தவளே!
களி நட ஈசனின் பங்கினளே!
ஒளி தரு கண்ணுடை உமையவளே!
நளின காந்தியின் உயிர்வடிவே!

தெளிவுறக் கண்டேன் - அவளின்றித்
துளியும் இயங்காது இவ்வுலகம்.
அளிப்பாள் ஊக்கம் எவ்வுயிர்க்கும்
தளிரோ களிறோ நர நாரணரோ

எளிதோ? அவள் திறம் எடுத்தியம்ப;
மிளிர் நகை வதனம் வருணிக்க.
குளிர்வரைச் சிவனுயிர் அவளன்றோ? 
எளியரைக் காத்திடும் தாய் அன்றோ?

வளி: காற்று, வெளி: அண்ட வெளி = space, களிநடம்: ஆனந்த நடனம், நளின காந்தி: அழகுறு ஒளிவீச்சு, ஒரு இராகத்தின் பெயர், தளிர்: முளைக்கும் இலை, தழை, களிறு: யானை, நரர்: மனிதர், நாரணர்: திருமால் போன்ற கடவுள்கள், திறம்: திறமை, சீர் பெருமை, இயம்ப: சொல்ல, மிளிர் நகை வதனம்: புன்முறுவல் மிளிரும் முகம்

வருணிக்க: வர்ணனை செய்ய, குளிர்வரை: குளிரும் மலை= கைலாசம்