Raman Inimai
Use this link to listen to the song
https://onedrive.live.com/redir?resid=467EBA89D7C571FB!34231&authkey=!AJuH3K4mtAT-SRA&ithint=file%2cwav
Use this link to listen to the song
https://onedrive.live.com/redir?resid=467EBA89D7C571FB!34231&authkey=!AJuH3K4mtAT-SRA&ithint=file%2cwav
டாக்டர். ராமகிருஷ்ண ஈஸ்வரன், திருச்சி எழுதிய பாடல் 28/04/15
இராமன் இனிமை
(ப) இத்தனை இனிய வதனம் எப்படிப்
பெற்றனை ராமா காரணம் சொல்வாய் ( இத்தனை)
(அ.ப) தந்தையின் வேள்விப் பாயசச் சுவையா?
அன்னையின் அமுதை உண்ட பயனா? ( இத்தனை)
(ச) கனிகளைக் கிழவி சுவைத்துத் தந்ததா?
வனிதைமணியின் ஒளி,துளி பட்டதா?
தமிழகச் சிற்பிகள் வடித்தபுன் னகையா?
பதின்மர், கம்பனின் தீஞ்சுவைத் தமிழா? ( இத்தனை)
அரும்பதவுரை:
வதனம்: அழகிய முகம்
அன்னை: கோசலை
கிழவி: சபரி
வனிதைமணி: சீதை (தியாகராஜர் க்ஷீரஸாகர என்ற கிருதியில் நாரீமணி என்று
அழைக்கிறார்)
பதின்மர்: பத்து ஆழ்வார்கள்
No comments:
Post a Comment